Monday, March 16, 2009

நாம் பிரிந்த நாளில்...


உணர்சிவயத்தில் பிரிந்ததாகத்தான் நினைத்தேன் முதலில்,
ஆனால் என் மனம் கல்லானது ஏன்?
நிற்க...!

இதோ ஏன் வாக்குமுலம்...

நாம் பிரிந்த நாளில்...
மனதில் ஒரு vaccum,
என் செரபுஞ்சி, சகாரா வானது,
என் கரையை அலைகள் தொடவில்லை,
என் கிழக்கில் சூரியன் உதிக்கவில்லை,
என் சிக்னலில் மட்டும் நிரந்தர சிகப்பு,
என் வானின் நூறு நிலாக்களை காணவில்லை,
என் மின்மினிப்பூச்சிகளிடம் ஏனோ powercut,
எனது Razorக்கு கொடுத்துவிட்டேன் V.R.S,

அமாவாசைகள் மட்டுமே என் இரவுகள் ஆனது,
நான் பேச யாரோ டப்பிங்,
பசியில்லாத நான்,
காற்றுக்குக்கூட Moodout வீசவில்லை,
நெருப்பிற்கே நம் பிரிவு சுடுகிறதாம்,
தண்ணீர் அழுகிறதோ, கரிக்கிறது,

சொல்லித் தெரிவதில்லை பிரிவின் கொடுமை,
சுபம் ... !

Monday, March 2, 2009

ஊனம் ! ! !


நீ 'கூப்பிடு' என்றபோது
ஊமையாகிய என் செல்போனை கண்டபோதுதான்
தெரிந்தது ஊனத்தின் வலி ! ! !