Friday, February 27, 2009

பிடிச்சிருந்தா சிரிச்சிகோ !!!


* என் அம்மாவின் தம்பியோ,
என் அத்தையின் கணவரோ,
இல்லாமல்
எனக்கு 'மாமா'வாகிய உன் அப்பா . . . !

* என் அப்பாவின் தங்கையோ,
என் மாமாவின் மனைவியோ,
இல்லாமல்
எனக்கு 'அத்தை'யாகிய உன் அம்மா . . . !

* என் மாமா மகனோ,
என் அத்தை மகனோ,
இல்லாமல்
எனக்கு 'மச்சான்' ஆகிய உன் அண்ணன் . . . !

* எனக்கு இரத்த உறவோ,
உனக்கு இரத்த உறவோ,
இல்லாமல்
'காதலர்கள்' ஆகிய நாம் . . . !

* இன்னும் உறவின்றி இருப்பது,
நம் இரு வீட்டு நாய்கள் தான்,
அதனால் உடனே பதில் அனுப்பவும் . . . !

Monday, February 23, 2009

உன் கூந்தல்...



என்னவாயிற்று தமிழ் அகராதிக்கு, அச்சில் பிழையா?
கருநிறம் - உன் கூந்தல்
அடர்த்தி - உன் கூந்தல்
மென்மை - உன் கூந்தல்
அலைபாயுதல் - உன் கூந்தல்
செழுமை - உன் கூந்தல்
பிணைதல் - உன் கூந்தல்
அழகு - உன் கூந்தல்
கார் மேகம் - உன் கூந்தல்
நள்ளிரவு - உன் கூந்தல்
அம்மாவாசை நிலவு - உன் கூந்தல்
கூந்தல்- உன் கூந்தல்
(போதும் இதற்கு மேல் எழுத கை வலிக்கிறது)
இத்தனை சொற்களுக்கும்,
பொருள் உன் கூந்தல் !
உவமை உன் கூந்தல் !
******
தமிழே வியந்தாலும்,
உன் கூந்தல் என்னை மயக்கவில்லை !

என்னை மயக்கியதெல்லாம்,
அங்கு உன் காது மடலில்,
ஒன்றும் தெரியாத குழந்தைப்போல்,
உன் விரலின் ஸ்பரிசத்தால் மயங்கி கிடக்கும்,
அந்த செவி ஓர கற்றை முடியில்தான் !

என்னவென்று சொல்வேன்,
அந்த முடி கற்றை ஆடும் ஆட்டத்தை,
காற்றால் எழுப்பப்பட்டு அது
உன் முகத்தில் மின்னலென விழுவதும்,
அதை உன் விரல் திரும்ப மயக்குவதும் !

நீ எனக்கு உன் மனதில் கூட இடம் ஒதுக்க வேண்டாம்,
அந்த செவி மடலில் ஒதுக்கு ஒரு இடம் ! ! !

Tuesday, February 17, 2009

என் ரயில் பயணங்கள்...


அன்றொரு நாள் ரயில் பயணங்கள் சுவையானவை,

கருப்புக்கோட்டு அங்கிள்,
துப்பாக்கி சார்,
ரன்னிங் ரேஸ் மரங்கள்,
தடக்...தடக்...ரிதம்,
அம்மாவின்
மடியில் தூக்கம்,
சந்தோசம்...!


பிறிதொரு நாள் ரயில் பயணத்தில் நீ,
இருபது பேர் மத்தியில் பனிமலராய் நீ,
கருப்புக்கோட்டு கிராஸ்டாக்,
உனக்கு காவலாய் நான், ஆனால் உன் கண்ணில் துப்பாக்கி,
அசைகின்ற கொடி நீ இருக்க, அசைவற்ற மரங்கள் எதற்கு,
எதிர் பர்த்தில் நீ தூங்க,
என் தூக்கம் தொலைந்தது உன் முகத்தில்,
மனதினுள் நூறு வயலின்கள் 'உன்னவள்' என்றுக்கூவ,
பிற ஓசை கிரகிக்கா என் செவிகள் செவிடாயின,
அன்று அடைந்த சந்தோசம்,
நான் கடவுள்...!


இன்று ரயில் பயணத்தில் நான்,
எதிர் பர்த்தில் நீ இல்லை,
அந்த துக்கத்தின் அடையாளமாய் கருப்புக்கோட்டுக்காரர்,
போலிஸ்காரரின் கருப்பு பாட்ஜ்,
என் துக்கம் காண சகியாமல் ஓடி ஒழியும் மரங்கள்,
ச்சு... ச்சு... பரிதாப சத்தம்,
எங்கு நோக்கிலும் வெறுமை,
வெறுமையில் இருந்துதான் உலகம் தோன்றியதாம்,
என் உலகம் எப்பொழுது தோன்றும்?

ஒரு கால் லல்லு பிரசாத் யாதவிற்கு தெரிந்திருக்கலாமோ???

Monday, February 16, 2009

வயது ! ! !


வயதினால் வருதலா அறிவு?
மூத்தவர் புத்திமான் என்ற பேதம்
கிடையாது என்று புகட்டினான் வேதம்
திருஞானசம்பந்தனும் அப்பருக்கே... !

Friday, February 13, 2009

முதல் சந்திப்பு...


வெண்தாமரை நீ கைகுலுக்க
சூரியன் நான் சந்திரனாய் குளிர்ந்தேன் !
உன் பெயரை மறுபடி கேட்ட பொழுது
நீ எண்ணியிருபாய் என் காது மந்தம் என்று,
பாவம் உனக்கெப்படி தெரியும்
உன் பெயரின் சுவையை என் செவிகள் மறக்க முடியாமல் துடித்ததை !
பட்டிமன்றமே நடத்தலாம்,
உன் பெயர் இயற்கையிலேயே இனிமையா ?
அல்லது உன் இதழ் பட்டதினால் இனிமையா என்று ! ! !


உன் பெயர்,
பெயரா அது?காதல் அகராதி,
ஒரு சொல்லில் இத்தனை பொருளா ?
சங்கின் இனிய நாதம், அது ஒலிக்கும்போது !
உன் தாய்க்கும் தந்தைக்கும்,
நாக்கில் பனி,
தேன் உறைந்து அவர்கள் நாவாக மாறியதோ ???

உன் உடல்,
மீண்டும் உன் தாய்க்கும் தந்தைக்கும்,
நன்றி ... இல்லை ... இல்லை ...
உன் மூதாதையர்களுக்கும் நன்றி,
அவர்களின் மரபணுக்களுக்கும் நன்றி,
மரபணு மாற்றம் என்ற அற்புதத்தைப் படைத்த கடவுளுக்கும் நன்றி !!!

காற்றைப்போல் மெல்லிய தேகம்,
நீரைபோல் ஓடும் இளமை,
புவிஈர்ப்புவிசையுடன் நிலமாகிய கண்கள்,
நெருப்பாகிய உன் பெண்மை,
ஆகாயம் அளவு உன் அழகு,
பஞ்ச பூதத்தில் மனிதன் அடக்கம்,
அதனால்தான் உன்னுள் நானோ ???

எனக்குள் சக்தி இருந்திருந்தால் நாம்
பிரியாமல் பார்த்தது பார்த்தப்படி செய்திருப்பேன் !
அந்த நொடி மாறாதவாரு
அனைத்து கடிகாரங்களையும் நிறுத்தியிருப்பேன் !

விடு... உன்னை யார் என்னுள் இருந்து பிரித்துவிட முடியும் ?

நீ எனைப் பிரிய முனைந்த போது
யுக முடிவோ என்று நினைத்தேன்,
ஆனால் மீண்டும் உன்னை சுவாசிக்க
யுக மரணத்தை சிறிது தள்ளிபோட்டேன் !
நாம் மீண்டும் இணைவோம் என்ற
நம்பிக்கையுடன் பிரிந்தேன் !!!