Monday, April 27, 2009

மோட்சம் அடைந்தவை !


உன் விரல் பட்டதனால் பேனாவும்,
உன் கைப் பட்டதனால் டேபிளும்,
உன் கால் பட்டதினால் உன் செருப்பும்,
உன் உடல் பட்டதினால் உன் உடையும்,
மோட்சம் அடைந்தன என்று,
ஆழ்ந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ! ! !

Wednesday, April 15, 2009

என் கவிதையின் கருவே...



என் கவிதையின் கருவே...
என் உணர்வுகளின் உருவே...
என் கற்பனைகளின் கற்பகத் தருவே...
தெரியுமா உனக்கு,
இந்தக் கவிதைகள் உன்மேல் பாடப்பட்டவை என்று?
படித்தவரெல்லாம் கேட்டார்கள்,
யார் அவள் என்று?
ஏன் நீயே ஒரு முறை கேட்டாய்
"யாரு அருண் அந்த பொண்ணு?"
என் புன்னகையால் அக்கேள்வியைப் புறந்தள்ளினேன்...!

உயிரே உனக்குத் தெரியுமா,
இவை உன் கவிதைகள் என்று..?
ஆம் தந்தையால் மட்டும் குழந்தை உண்டாக்க முடியாது,
என் கவிதைகளின் தாய் நீ..!


பிறரால், அதைப் படிக்கும்போது
சில இடங்கள் புரியாமல் இருக்கும்,
புரியாதவர்களுக்கு புரியாதிருந்தால் பரவாயில்லை
உனக்கு புரியவில்லையென்றால்?

ஆனால் உனக்கு நன்கு புரியும் என்று நம்புகிறேன்,
ஏனெனில் உன்னோடு நானிருந்த ஒவ்வொரு கனமும்,
இதோ செதுக்கி வைத்துள்ளேன் கவி வடிவில்..!

இவற்றை நீ படிக்கும்பொழுது அச்சம்பவங்கள் உன் நினைவில் வந்தால்,
அப்பொழுது சொல்லிக்கொள்வேன் நான்கவிஞன் என்று,
ஆனால் நீ படித்து அவள் யாரென்றால்
மீண்டும் புன்னகைப்பேன்,
புரிந்துக்கொள்..!

Wednesday, April 8, 2009

கா.மு / கா.பி ...



காதலிக்கும் முன்...

எட்டு மணிவரை தூக்கம்,
எடுப்பு சாப்பாடு,
குளிக்காத நாட்கள்,
shave செய்யாத முகம்,
எந்தக் கவலையும் இல்லாத மனம்,
ஜஸ்ட் பாஸ் கேஸ்,
தண்ணியாக செலவழித்த பணம்,
கனவில் ஐஸ்வர்யா ராய்,
பெண்கள் என்றால் அலட்சியம்,
அளவில்லாத வெட்டி பேச்சு,
ஏடாகூடா உடை,
கலைந்த தலைமுடி,
மூக்கின் மேல் கோவம்,
சண்டே சினிமா,
காதல் காட்சியா ரிமோட் எங்கே?,
எல்லாவற்றிற்க்கும் மேல் நானாகிய நான்,
இவைதான் என் அடையாளங்கள் !



காதலித்த பின்...
உறங்காத இரவுகள் (என் தலையணை சொல்லும்),
பாதி நாட்கள் விரதம் (நீ வேண்டி),
இருமுறை குளியல் (உன் அருகே வர),
தினமும் shaving (உன் கலரை மேட்ச் செய்ய),
டைடானிக்கே மூழ்கிய மனம் (உன் நினைவில்),
படிப்பில் கவனம் (உனக்காக சம்பாதிக்க),
கஞ்சனாக மாறினேன் (உனக்கு கால் பண்ண),
தூங்கினால்தானே கனவு வர (அதிலும் நீ),
பெண்கள் என் சகோதரிகள் (உன்னை தவிர),
ஊமையாகிய என் வாய் (நீ பேசாதபோது),
கவனமான உடுப்பு (உன்னோடு இருக்க),
கோவம் என்றால்? (புல்லைத் தின்னும் புலி),
70mmல் உன் முகம் (சினிமா எதற்கு),
காதல் காட்சியா வால்யூம் ஏத்து (திரையில் நாம்),
உன்னில் பாதியாகிய நான்,
யார் என்னை மாற்றியது ???